சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

மதுரை, ஆக. 31: மதுரையில் அரசு பேருந்துகளின் டிரைவர், கண்டக்டர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை கோட்டம் மற்றும் மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை சார்பில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

மதுரை பைபாஸ் ரோட்டிலுள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டுவது, சாலை விதிகளை பின்பற்றி வாகனம் ஓட்டுவது, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது, மாநகரில் வேகத்தை குறைத்து பேருந்தை இயக்குவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

விபத்தை தவிர்க்க ஓட்டுனர்கள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வும் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மதுரை கோட்ட பொது மேலாளர் மணி, மாநகர் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் இளமாறன், இன்ஸ்பெக்டர் தங்கமணி, எஸ்.ஐ சந்தானகுமார், உதவி மேலாளர் மாரிமுத்து, கிளை மேலாளர்கள் அசோக்குமார், சத்தியமூர்த்தி, விபத்து தடுப்பு பிரிவு அலுவலர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து