சாலை பணியை துணை மேயர் ஆய்வு

ஓசூர், ஜூன் 18: ஓசூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு உள்ள குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஓசூர் ஜேஜே நகர் பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கழிவுநீர் கால்வாய் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்க, 5 தெருக்களில் ₹50 லட்சம் மதிப்பீட்டில் நடந்து வரும் பணிகளை மாநகர துணை மேயர் ஆனந்தய்யா ஆய்வு மேற்கொண்டார்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து