சாலை பணிகளை அதிகாரி ஆய்வு

திருச்செங்கோடு, அக்.4: நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செங்கோடு உட்கோட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நடைபெற்று வரும் ஓமலூர்- சங்ககிரி- திருச்செங்கோடு- பரமத்தி சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை சேலம் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சசிகுமார், நேற்று நேரில் பார்வையிட்டு கலவையின் தடிமன், அடர்த்தி, உறுதித்தன்மை மற்றும் மேல்தள சாய்வு ஆகியவற்றை ஆய்வு செய்தார். அப்போது, பருவமழை காலம் தொடங்க இருப்பதால், சாலை பணிகளை விரைந்து முடிக்க அலுவலர் மற்றும் ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, நாமக்கல் கோட்ட பொறியாளர் திருகுணா, திருச்செங்கோடு உதவி கோட்ட பொறியாளர் நடராஜன், உதவி பொறியாளர் மோகன்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts

திருநின்றவூர் ஏரியில் ₹50 லட்சம் மதிப்பில் மதகுகளை சீரமைத்து, கால்வாய் சுத்தம் செய்யும் பணி தீவிரம்: நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி ஆர்எம்கே பள்ளி மாணவனுக்கு தங்கம்

கும்மிடிப்பூண்டி அருகே பயங்கரம்; ஓசியில் பொருள் கொடுக்காத ஆத்திரத்தில் மளிகைக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு