சாலை சீரமைப்பு பணி தீவிரம்

 

உடுமலை, நவ. 6: தாராபுரம் நெடுஞ்சாலை கோட்டத்துக்கு உட்பட்ட மடத்துக்குளம் பகுதியில் சில சாலைகள் குண்டும் குழியுமாக காணப்பட்டன. இவற்றை சீரமைக்கும் பணியில் மாநில நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

உடுமலை- குமரலிங்கம் சாலை, மாநில நெடுஞ்சாலை, மாவட்ட இதர சாலைகளில் உள்ள பள்ளங்கள் சரி செய்யப்பட்டு வருகின்றன. இதன்மூலம் முதல்வரின் பள்ளமில்லா சாலை, பாதுகாப்பான பயணம் என்ற எண்ணம் நிறைவேற்றப்பட்டு வருவதாக நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர்.

Related posts

ஒரே நாடு ஒரே தேர்தல் முறை சர்வாதிகார செயல்பாடுகளுக்கு வழிவகுக்கும்: காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானம்

அர்ச்சகர் பள்ளி ஹெச்எம்மிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் காஞ்சிபுரம் அறநிலையத்துறை இணை ஆணையர் மீது வழக்கு

மாம்பலம் காவல் நிலையத்திற்குள் புகுந்து காவலரை தாக்கி இளம்பெண் ரகளை: ஆவணங்களை கிழித்து, கணினியை உடைத்தார்