சாத்தூர், ஜூலை 24: சாத்தூர் போக்குவரத்து நகரை சேர்ந்தவர் அய்யாச்சாமி(50), இவரது மனைவி இருளாயி(45). இருவரும் நேற்று மதியம் சாத்தூர் அருகே எம்.நாகலாபுரத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர். நென்மேனி எம்.நாகலாபுரம் சாலையில் சென்றபோது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையில் விழுந்தது. இதில் கணவன், மனைவி பலத்த காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை அப்பகுதியினர் மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக இருக்கன்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.