சாராய வியாபாரி குண்டாசில் கைது ஒடுகத்தூர் அருகே

ஒடுகத்தூர், ஜூலை 23: ஒடுகத்தூர் அருகே சாராய வியாபாரியை குண்டாசில் போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சி எட்டிப்பட்டு மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர்(43). இவர் கள்ளச்சாராயம் விற்று வந்ததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வருவதால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி எஸ்பி மணிவண்ணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் சுப்புலட்சுமி, சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நேற்று உத்தரவிட்டார். இந்த உத்தரவின் நகல், சிறையில் உள்ள சங்கரிடம் வழக்கப்பட்டது.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி