சாராயம், மது விற்ற 95பேர் கைது

அரூர், நவ.2: அரூர் கோட்டத்தில் கடந்த மாதம் மதுவிலக்கு போலீசார் நடத்திய வேட்டையில் சாராயம், மது விற்றதாக பெண்கள் உள்பட 95பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1849 மதுபாட்டில் மற்றும் 10 லிட்டர் சாராயம், 200 லிட்டர் ஊரல், 7 டூவீலர்கள் கைப்பற்றப்பட்டது. அரூர் கோட்டத்தில் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் வசந்தா மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். கடந்த மாதம் நடத்திய வேட்டையில் கள்ளச்சாராயம் மற்றும் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தது, ஓட்டல், கடைகளில் மது குடிக்க அனுமதித்தது தொடர்பாக அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி மற்றும் கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 20 பெண்கள் உள்பட 95 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிந்து 1849 மதுபாட்டில் மற்றும் 10 லிட்டர் சாராயம், 200 லிட்டர் ஊரல், 7 டூவீலர்கள் கைப்பற்றப்பட்டது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை