சாராயம் கடத்தல் வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டு சிறை

விழுப்புரம், செப். 27: விழுப்புரம் அருகே சாராயம் கடத்தல் வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் பெரியகாலனி பகுதியை சேர்ந்தவர் விஜய்(26). இவர் கடந்த 2020ம் ஆண்டு சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்தபோது விழுப்புரம் மதுவிலக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 2018ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த மணிமாறன்(39) என்பவரையும் சாராயம் விற்பனை செய்த வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை விழுப்புரம் முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி தமிழ்ச்செல்வன் நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட 2 பேருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி