சாத்தூர் அருகே மின்னல் தாக்கி 3 பேர் பலி

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே நள்ளி கிராமத்தை சேர்ந்த 6 பேர் காட்டுப்பகுதியிலுள்ள துர்க்கையம்மன் கோயிலுக்கு நேற்று சாமி கும்பிட சென்றனர். அங்கு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் 6 பேரும் கோயில் வாசலருகே நின்றிருந்தனர். அப்போது மின்னல் தாக்கியதில் சோலைராஜ் மனைவி சண்முகசுந்தரவள்ளி(56), சோலையப்பன் மகன் கருப்பசாமி (16), கருப்பசாமி மனைவி தங்கமாரியம்மாள்(45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் காயத்துடன் உயிர் தப்பினர். இது குறித்து தகவலறிந்த சாத்தூர் தாலுகா போலீசார் மின்னல் தாக்கி உயிரிழந்த 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் காயமடைந்தவர்களை நள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்துள்ளனர்…

Related posts

மக்களுடன் முதல்வர், காலை உணவுத் திட்டம் வரும் 11 மற்றும் 15ம் தேதிகளில் விரிவாக்கம்: எம்.பி, எம்எல்ஏக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு