Saturday, September 21, 2024
Home » சாத்தான்குளம் பஜாரில் தொடரும் போக்குவரத்து நெருக்கடி

சாத்தான்குளம் பஜாரில் தொடரும் போக்குவரத்து நெருக்கடி

by Karthik Yash

சாத்தான்குளம், ஆக. 22: சாத்தான்குளம் தாலுகா தலைமையிடம் என்பதால் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், தங்களது அன்றாட தேவை உள்பட பல்வேறு தேவைகளுக்காக சாத்தான்குளத்துக்கு தங்களது இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர். மேலும் அரசின் திட்ட உதவிகள் பெறுவது தொடர்பாக தாலுகா, யூனியன் அலுவலகங்கள் உள்பட அரசு அலுவலகங்களுக்கும் வருகின்றனர். சாத்தான்குளம் பஜார் பகுதியில் கடைகள் அதிகளவில் இருப்பதால் நகரின் மையப்பகுதியாக விளங்குகிறது. இதன் காரணமாக பல்வேறு தரப்பினரும் தினமும் வந்து செல்லும் பகுதியாக விளங்குகிறது. இதனால் போக்குவரத்து நெருக்கடி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.

இதன் காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே சாத்தான்குளம் பஜாரில் ஒரு வழிப்பாதை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இதற்கென முறையான போக்குவரத்து காவலர் நியமிக்கப்படாததால் அரசு பஸ்கள், மினிபஸ்கள் முறையாக ஒரு வழிப்பாதையை பயன்படுத்தினாலும் எதிரே வரும் லாரி உள்ளிட்ட இதர வாகனங்களால் அடிக்கடி நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து ஸ்தம்பிப்பதாக வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக சாதாரண நாட்களை தவிர முகூர்த்த தினங்கள், விழா காலங்களில் பஜார் சாலைகளை அதிக வாகனங்கள் ஆக்கிரமிக்கின்றன. இங்குள்ள மண்டபங்களுக்கு வருவோரும் கடைவீதி பகுதியிலேயே வாகனங்களை நிறுத்தி செல்வதால் போக்குவரத்து நெருக்கடி என்பது தற்போதும் தொடர் கதையாகி வருகிறது.

இதனை தடுப்பதற்கு ஒதுக்குப்புறங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு வருமாறு திருமண மண்டபங்களில் விழிப்புணர்வு பதாகைகள் அமைக்க போலீசார் அறிவுறுத்த வேண்டுமென வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். நேற்று ஆவணி மாத முகூர்த்த நாள் என்பதால் சாத்தான்குளம் பஜார் பகுதியில் காலை முதலே வாகனங்கள் அதிகளவில் வந்து சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். எனவே விசேஷ நாட்களில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க சாத்தான்குளம் பஜாரில் கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும், ஒரு வழிப்பாதை திட்டத்தை கட்டாயம் அமல்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

You may also like

Leave a Comment

11 − eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi