போலந்தின் வார்க்லா நகரில் நடைபெற்ற உலக இளையோர் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இந்தியக் குழு 8 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியது. இந்த தொடரின் சிறுமியர் குழு பிரிவில் கோயமுத்தூரைச் சேர்ந்த ரிதுவர்ஷினி செந்தில்குமார் (14 வயது) தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். நேற்று மாலை தாயகம் திரும்பிய ரிதுவர்ஷினி, பயிற்சியாளர் யுவராஜுக்கு விமான நிலையத்தில் தமிழ்நாடு மாநில வில்வித்தை சங்கத் தலைவர் குமார் ராஜேந்திரன், செயலர் ஷிகான் உசைனி மற்றும் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்….
சாதனை வீராங்கனை ரிதுவர்ஷினிக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு
previous post