சாதனை மாணவிகளுக்கு திமுக சார்பாக கல்வி நிதி உதவி

சிவகாசி, ஜூன் 7: அரசு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவிகளுக்கு, சிவகாசி மாநகர திமுக சார்பாக நிதி உதவி வழங்கப்பட்டன. சிவகாசி மாநகராட்சியில் திருத்தங்கல் மண்டலத்தில் வசித்து வரும் கார்த்திகா, சுபாஷினிதேவி, லிங்கேஸ்வரி ஆகியோர், அரசு தேர்வில் பள்ளி அளவில் சாதனை படைத்தனர்.

இதையடுத்து, 3வது மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவிகளை பாராட்டிய திமுக மாநகர செயலாளர் எஸ்.ஏ.உதயசூரியன், அவர்கள் மூவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் கல்வி நிதி உதவி வழங்கினார். இந்த நிழ்ச்சியில் மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் குருசாமி, திமுக பகுதி கழக செயலாளர்கள் மாரீஸ்வரன், கவுன்சிலர் சேதுராமன், மாவட்ட பிரதிநிதி ராஜேஷ், 10 வது வட்ட கழக செயலாளர் கருப்பசாமி, சிவகாசி மாநகர நெசவாளர் அணி துணை அமைப்பாளர் விக்ரமாதித்தன், 12வது வார்டு அர்ச்சுனன், கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை