கோபால்பட்டி, ஜூலை 6: சாணார்பட்டி அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பெண்கள் உட்பட 6 பேர் காயமடைந்தனர். திண்டுக்ககல் மாவட்டம், சாணார்பட்டி அருகே, அய்யாபட்டியில் ஜவுளிக்கடை உள்ளது. இதில் பணிபுரியும் ஊழியர்கள் 6 பேர், வேலையை முடித்துவிட்டு ஆட்டோவில் தங்களது வீட்டுக்கு புறப்பட்டு வந்தனர். வழியில் மொட்டையகவுண்டம்பட்டி பிரிவு அருகே, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தாறுமாறாக ஓடியது. பின்னர், சாலையோரம் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில், ஆட்டோவில் இருந்த ஐயாபட்டி மற்றும் மொட்டையகவுண்டம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த அம்சவள்ளி (35), துளசிமணி (28), சுகந்தி (38), எலிசபெத் ராணி (48) உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் கோபால்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.
சாணார்பட்டி அருகே ஆட்டோ கவிழ்ந்து 6 பேர் காயம்
previous post