சாட்சி சொல்ல வந்தவரை மிரட்டியவர் மீது வழக்கு

 

கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் மருதாசலம் (52). இவர் ஒரு வழக்கு தொடர்பாக கோவை ஜேஎம் எண் 6 கோர்ட்டில் சாட்சி சொல்ல வந்துள்ளார். அப்போது கோர்ட் வளாகத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய தொண்டாமுத்தூர் வளையன் குட்டை பகுதியை சேர்ந்த ஜார்ஜ் குப்புசாமி என்பவர் அங்கே இருந்தார். இவர் மருதாச்சலத்திடம், தகாத முறையில் பேசி மிரட்டியதாக தெரிகிறது. இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து