சாக்கடை கால்வாய்க்குள் விழுந்த தெரு நாய்கள்

 

திருப்பூர், செப்.4: திருப்பூரில், மூடப்படாத சாக்கடை கால்வாயில் விழுந்த 2 தெரு நாய்களை 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயணைப்புத்துறையினர் மீட்டனர். திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, மண்ணரை, எம்ஜீஆர் நகரில், சுமார் 13 அடி ஆழம் கொண்ட மாநகராட்சி சாக்கடை கால்வாய் உள்ளது. சாலை மட்டத்தில் இந்த சாக்கடை கால்வாய் மூடப்படாமல் திறந்த நிலையிலேயே உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் சுற்றித்திரிந்த 2 தெருநாய்கள் எதிர்பாராதவிதமாக தவறி சாக்கடை கால்வாயில் விழுந்தது. இதனையடுத்து நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு அப்பகுதியில் திரண்ட பொதுமக்கள், வடக்கு தீயணப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத்துறையினருடன் பொதுமக்கள் இணைந்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி இரு நாய்களையும் மீட்டு தெருவில் விட்டனர்.

Related posts

வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் டெக்னோ விஐடி 24 தொடக்கம்

என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி காக்காதோப்பு பாலாஜியின் உடல் மூலக்கொத்தளம் மயானத்தில் அடக்கம்: அவருடன் காரில் வந்து சிக்கியவர் பரபரப்பு வாக்குமூலம்

ஒரே நாடு ஒரே தேர்தல் முறை சர்வாதிகார செயல்பாடுகளுக்கு வழிவகுக்கும்: காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானம்