சாக்கடையில் நிர்வாண நிலையில் பெண் சடலம் மீட்பு

ஈரோடு, ஏப். 13: சத்தியமங்கலத்தில் நிர்வாண நிலையில் பெண் சடலம் சாக்கடையில் கிடந்ததை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். சத்தியமங்கலம் போக்குவரத்து காவல்நிலையம் முன்பாக உள்ள சாக்கடை கால்வாயில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் நிர்வாண நிலையில் கிடப்பதாக சத்தியமங்கலம் டவுன் கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இது குறித்து சத்தியமங்கலம் போலீசில் கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர் புகார் செய்தார். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 8 அடி ஆழ சாக்கடையில் அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நிர்வாண நிலையில் சடலம் கிடந்ததாலும், அருகிலேயே பச்சை கலரில் சேலை கிடந்துள்ளதாலும் பலாத்காரம் செய்யப்பட்டாரா? அல்லது தவறி சாக்கடையில் விழுந்தாரா? என்பது குறித்தும், இறந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டறை தொழிலாளி சடலம்: இதேபோன்று அரச்சலூர் அடுத்துள்ள ஓடாநிலை, கரட்டாங்காட்டுபுதூரை சேர்ந்தவர் தங்கராஜ் (40). லேத் பட்டறை தொழிலாளி. மதுப்பழக்கம் உள்ளவர். கடந்த 4ம் தேதி வேலைக்கு சென்று வருவதாக கூறிச்சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடி வந்தனர். இந்நிலையில், கொல்லன்வலசு பகுதியில் அமைந்துள்ள கல்குவாரி அருகில் உடல் அழுகிய நிலையில் நேற்று முன்தினம் தங்கராஜ் சடலமாக கிடந்தார். இது குறித்து அரச்சலூர் போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அளவுக்கு அதிகமாக மது குடித்து இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமாக? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

திரவுபதியம்மன் கோயிலுக்கு சொந்தமான ₹35 லட்சம் மதிப்புள்ள வீடு மீட்பு அறநிலையதுறை அதிகாரிகள் சீல் வைத்தனர் வேலூர் வேலப்பாடியில் நீதிமன்ற உத்தரவின்பேரில்

வரத்து அதிகரிப்பால் பீன்ஸ் விலையில் சரிவு வேலூர் நேதாஜி மார்க்கெட்டில்

ஐஎப்எஸ் நிதிநிறுவன ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை வேலூரில் நிதி நிறுவன மோசடியால் விரக்தி