சவுதியில் உள்ள கணவன் செல்போனில் முத்தலாக்: உபி போலீசார் வழக்கு பதிவு

படேபூர்:  உத்தரப்பிரதேசத்தின் முகமத்பூர் கவுன்டி பகுதியை சேர்ந்தவர் தசாப்புல். இவர் கடந்த 2005ம் ஆண்டு ரசியா பானு என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணம் நடந்ததில் இருந்து வரதட்சணை கேட்டு மனைவியை தாசப்புல் கொடுமை செய்து வந்துள்ளார். அதன் பின்னர் வேலைக்காக சவுதி அரேபியா சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த திங்களன்று மனைவி ரசியாவிற்கு போன் செய்த தசாப்புல் அவருக்கு மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட ரசியா பானு, ஹத்கம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் செல்போன் மூலம் முத்தலாக் கொடுத்த தசாப்புல், வரதட்சணை கேட்டு கொடுமை செய்த அவரது குடும்பத்தினர் என மொத்தம் 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். …

Related posts

பாலியல் தொல்லை:‘ஈஷா’ மருத்துவர் மீது போக்சோ : நீதிபதியிடம் 9 மாணவிகள் வாக்குமூலம்

போக்குவரத்து விதிகளை மீறி கார் பயணம் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு ரூ. 7,000 அபராதம்

காங்கிரசில் நகர்ப்புற நக்சல்கள்: பிரதமர் மோடி கடும் தாக்கு