சவுடு மண் குவாரிக்கு அனுமதி தரக் கூடாது: கிராமமக்கள் மனு

திருவள்ளூர், ஜூன் 8: திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் ஊராட்சியில் 1500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள ஏரியில் ஏற்கனவே 3 முறை அரசு மண் குவாரிக்கு அனுமதிக்கப்பட்டது. அப்போது அரசு நிர்ணயித்த அளவைவிட அதிகமாக மண் எடுத்து ஆழப்படுத்தினர். இதனால் ஏரியின் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால் விவசாய நிலங்களும் போதிய நீர் பாசன வசதி இல்லாமல் 200 ஏக்கர் விவசாய நிலம் வீட்டு மனைகளாக ஆக்கப்பட்டது. எனவே திருப்பாச்சூர் கிராமத்தில் அரசு சவுடு மண்குவாரிக்கு அனுமதி அளிக்க கூடாது என கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்