கேடிசி நகர், ஜூலை 6: ஆலங்குளம் அருகே உள்ள தாழையூத்து கிழக்கு மெயின் ரோட்டை சேர்ந்தவர் பரமசிவன்(55). இவர், இங்கு சலூன் கடை நடத்தி வந்தார். மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர். கடந்த 3ம் தேதி பரமசிவன், கடையில் பணியில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கடையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சலூன் கடை ஊழியர் மயங்கி விழுந்து பலி
previous post