சலவை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மகாத்மா காந்தி சலவை தொழிலாளர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுராந்தகம் ஆர்டிஓ அலுவலகம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொதுச்செயலாளர் கண்ணதாசன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பட்டாபி, முருகவேல் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், சலவை தொழிலாளர்கள் அனைவருக்கும் இலவச இஸ்திரி பெட்டி, அவர்களது குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா, சலவை தொழிலாளர்களுக்கு செங்கல்பட்டில் சமுதாய கூடம் அமைத்து தர வேண்டும், சலவை தொழிலாளர் பிள்ளைகளுக்கு அரசு வேலைகள் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில், சிபிஎம் நிர்வாகிகள் கிருஷ்ணராஜ், மாசிலாமணி, ராஜா, அர்ஜுன்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மதுராந்தகம் பஸ் நிலையத்தில் இருந்து ஆர்டிஓ அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை