திருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகே வையப்பமலையில் செயல்பட்டு வரும் கவிதாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் ஈஷா யோகா மையம் இணைந்து சர்வதேச யோகா தினத்தை கொண்டாடின. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தாளாளர் செந்தில்குமார் தலைமை வகித்து பேசினார். அப்போது, யோகாவின் சிறப்பம்சங்கள் குறித்து விளக்கி கூறினார். கல்லூரியின் முதல்வர் விஜயகுமார் வாழ்த்தி பேசினார். சிறப்பு விருந்தினர்களாக ஈஷா யோகா தன்னார்வலர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார்.
சர்வதேச யோகா தினம் கடைபிடிப்பு
previous post