சர்வதேச காற்றாடி திருவிழா நிறைவு

 

மாமல்லபுரம், ஆக. 19: மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கடற்கரையில், கடந்த 15ம் தேதி தொடங்கிய சர்வதேச காற்றாடி திருவிழா நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. இதில், இந்தியா, தாய்லாந்து, வியட்நாம், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்த 45க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று, தேசியக் கொடி, கரடி, புலி, ஆக்டோபஸ், பாம்பு, கதக்களி, சூப்பர்மேன், டிராகன், ஜல்லிக்கட்டு காளை, சுதந்திர போராட்ட வீரர்களின் உருவங்களை பல வண்ண வடிவங்களில் காற்றாடிகளை பறக்க விட்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி