Wednesday, July 3, 2024
Home » சமூக வலைதளத்தில் பணம் கொட்டும் என்ற பேராசையில் தன் குடும்ப பெண்களின் படங்களை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டவர் கைது: போலீசார் அதிரடி

சமூக வலைதளத்தில் பணம் கொட்டும் என்ற பேராசையில் தன் குடும்ப பெண்களின் படங்களை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டவர் கைது: போலீசார் அதிரடி

by kannappan

சென்னை: குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க தன் குடும்பத்தை சேர்ந்த பெண்களையே ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஏராளமான ஆபாச படங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஓட்டேரியை சேர்ந்தவர் கிருஷ்ணா (21), பி.காம் படித்துவிட்டு பாடி லூகாசில் உள்ள தனியார் நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி வேலை செய்து வருகிறார். எப்போதும் செல்போனுடன் திரியும் இவரது நடவடிக்கையில் உறவினர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்தில், அவரது செல்போனை அவருக்கு தெரியாமல் உறவினர்கள் எடுத்து பார்த்தபோது, அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில், கிருஷ்ணா தனது பெரியம்மா, அத்தை, அத்தை மகள் என பலரது புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து வைத்திருந்தது தெரிந்தது. உடனே இதுபற்றி ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் கிருஷ்ணாவை பிடித்து விசாரித்தபோது, இன்ஸ்டாகிராமில் போலியாக ஒரு கணக்கு தொடங்கி, ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவு செய்தால், அதன்மூலம் பார்வையாளர்களை அதிகரித்து, வருவாய் ஈட்டலாம், என்ற ஆசையில் கடந்த ஒரு மாதமாக இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார். மேலும் விசாரணையில், தனது குடும்பத்தில் உள்ள பெண்கள், வீட்டு வேலை செய்யும்போது, துணி துவைக்கும் போது ஆடை சற்று விலகி இருந்தால், அதை அவர்களுக்கு தெரியாமல் செல்போனில் படம் பிடித்து, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும், சில படங்களை ஆபாசமாக மார்பிங் செய்தும் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, குடும்ப பெண்களின் ஆபாச புகைப்படங்களை பார்ப்பதற்கு ரூ.500 கட்டினால் போதும் என வடமாநிலத்தவர்கள் நடத்தும் வெப்சைட்களுக்கும் இந்த புகைப்படங்களை அனுப்பி பணம் சம்பாதிக்க முடிவு செய்ததும் தெரியவந்தது. அவரை நேற்று கைது செய்து, அவரது செல்போனில் இருந்த ஆபாச படங்களை போலீசார் அழித்தனர். மேலும், அவரது பேச்சில் சில முரண்பாடுகள் தெரிவதால் அவரை மனநல மருத்துவரிடம் பரிசோதிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். தனது குடும்ப பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து, இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

You may also like

Leave a Comment

sixteen + seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi