Tuesday, July 2, 2024
Home » சமூக வலைதளத்தில் அவதூறு பாஜ நிர்வாகி மீது போலீசில் புகார்

சமூக வலைதளத்தில் அவதூறு பாஜ நிர்வாகி மீது போலீசில் புகார்

by kannappan

சென்னை: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, சமூக நீதி மாணவர் இயக்கம் உள்ளிட்டோர் நேற்று பல்லாவரம் காவல் நிலையத்தில் பாஜ மாநில இளைஞரணி செயலாளர் வீர.திருநாவுக்கரசு என்பவர்மீது புகாரளித்தனர். பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பாஜ மாநில இளைஞரணி செயலாளர் வீர.திருநாவுக்கரசு தனது முகநூல் பக்கத்தில் மற்றும் மேடைப் பேச்சுக்களில் தொடர்ந்து தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வருகிறார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு கூட தமது முகநூல் பக்கத்தில், ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த நமது முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் இறப்பிற்கு இஸ்லாமியர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். அவரின் இறப்பை பட்டாசு வெடித்து கொண்டாடுகிறார்கள் என  தவறான தகவல்களை கூறி வருகிறார். விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிபின் ராவத்தை முதலில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஆம்புலன்ஸ் வாகனம் தான் என்பது தமிழகம் அறிந்த செய்தி. இவ்வாறு தமிழகத்தில் மதக் கலவரத்தை தூண்டும் திருநாவுக்கரசை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். தமிழக காவல்துறை அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், நாங்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுப்போம். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னை ஐஐடி வளாகத்தில் பாத்திமா லத்தீப் என்பவர் பேராசிரியர்களின் சமூக புறக்கணிப்பு காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இந்த மர்ம மரணம் குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்த போதும் கூட, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோல் பல்லாவரத்தில் உள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து வரும் திருநாவுக்கரசு என்னும் பேராசிரியரால், பாத்திமா லத்தீப் சம்பவம் போன்று அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமோ என்று, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அச்சப்படுகிறது,’’ என்றனர்….

You may also like

Leave a Comment

fifteen + twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi