சமூக நலன், மகளிர் உரிமை துறையில் 3 திட்டங்களுக்கு ரூ.7.34 கோடி நிதி ஒதுக்கி அரசாணை

சென்னை: சமூக நலன், மகளிர் உரிமை துறையில் 3 திட்டங்களுக்கு ரூ.7.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக நலன், மகளிர் உரிமை துறை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் வெளியிட்ட அரசாணையில் கூறியுள்ளதாவது: சமூக நலன் – மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், 2022-23ம் ஆண்டிற்கான சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மானியக் கோரிக்கையை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்த போது, அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்த அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில், எடை குறைவுடன் பிறக்கும் குழந்தைகளை கண்காணித்திட ரூ.85 லட்சத்தில் 1,000 எண்ணிக்கையிலான மின்னணு தொழில்நுட்ப வளர்ச்சிக் கண்காணிப்பு கருவிகள் வழங்கவும், ரத்த சோகையை தடுக்க 19 மாவட்டங்களில் தன் சுத்தம், குடற்புழு நீக்கம், கை கழுவுதல் உள்ளிட்ட விரிவான தீவிர விழிப்புணர்வு இயக்கம் ரூ.4.75 கோடியில் நடத்தவும் மற்றும் மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட மையங்களில், குழந்தைகளின் முதல் 1000 நாட்கள் குறித்த விழிப்புணர்வு ரூ.1.74 கோடியில் ஏற்படுத்தவும் ஆக மொத்தம் ரூ.7.34 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 167 இடங்களில் வெள்ளத்தடுப்பு பணிகள் நிறைவு: டிசம்பர் 31ம் தேதி வரை பராமரிப்பு மற்றும் கண்காணிக்க திட்டம்

பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரம் – திருச்சி இடையே இன்டர்சிட்டி சிறப்பு ரயில்: டிசம்பர் 31ம் தேதி வரை வாரத்தில் 5 நாட்கள் இயக்கம்

குப்பை தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை சடலத்தை கடித்து குதறிய தெருநாய்கள்