பரமக்குடி,செப்.10: பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பரமக்குடி கிழக்கு ஒன்றியம் வெங்கிட்டன் குறிச்சி ஊராட்சி மருந்தூர் கிராமத்தில் சமுதாயக்கூடம் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனை தொடர்ந்து ரூ.26 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய சமுதாயக்கூடம் அமைக்கும் பணி நடைபெற்று முடிந்தது. இதன் திறப்பு விழா பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் தலைமையில், பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் பத்மாவதி ரவிச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் நதியா மனோகரன், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், அண்ணாமலை சண்முகநாதன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சன் சம்பத்குமார், பரமக்குடி மேற்கு முன்னாள் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், பரமக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருப்பையா, தேவப் பிரியதர்ஷினி கலந்து கொண்டனர்.