சமயபுரம்-ஸ்ரீரங்கம் திருவிழாவை முன்னிட்டு கந்தர்வகோட்டை நகர் வெறிச்சோடியது

கந்தர்வகோட்டை,ஏப்.19: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து ஏரளாமான பெண்கள், ஆண்கள் சமயபுரம் மாரியம்மன் தேரோட்டத்திற்கு மாலை அணிந்து விரதம் இருந்து பாதயாத்திரையாக சென்று உள்ளனர். மேலும் அவர்கள் சமயபுரம் மாரியம்மன் தேரோட்டதை பார்த்துவிட்டு, ஸ்ரீரங்கம் தேரோட்டதையும் கண்டு சாமி தரிசனம் செய்து வர வேண்டிய சூழ்நிலையில் கந்தர்வகோட்டையில் இருந்து சமயபுரம், ஸ்ரீரங்கம் ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் திருச்சி சென்றுள்ளனர். ஆகையால் கந்தர்வகோட்டை கடைவீதியும், பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. வியாபார கடைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் வியாபாரம் மந்த நிலையில் காணப்பட்டது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை