சமயபுரம் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் 3 நாளாக மின்விநியோகம் நிறுத்தம்

சமயபுரம், ஜூலை 4: மண்ணச்சநல்லூர் தொகுதிக்குட்பட்ட இனாம் சமயபுரம் ஒத்தக்கடை புதூர் மாணிக்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜூலை 1ம் தேதி டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் இப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 2 நாட்களாகியும் சரி செய்யாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சமயபுரம் தேசிய நெடுஞ்சாலை உள்ள சுங்கச்சாவடி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மரக்கிளைகளை வெட்டி சாலையில் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த லால்குடி டிஎஸ்பி ரகுபதி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மின்சாரம் வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதி அளித்தார். இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை