சமயபுரம் அருகே கோயில் பூசாரி வீட்டில் 2 ஆடுகள் திருட்டு

 

சமயபுரம், ஆக.20:சமயபுரம் அருகே கோயில் பூசாரி வீட்டில் 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.சமயபுரம் அருகே உள்ள எஸ்.கள்ளுக்குடியில் பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம். கோயில் பூசாரியான இவர் ஆடு, மாடு, கோழிகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவரது ஆட்டுக் கொட்டகையில் புகுந்த மர்ம நபர்கள் இரண்டு ஆடுகளை திருடி சென்றுள்ளனர். இது அப்பகுதியில் உள்ள சிசிடி கேமராவில் 4 நபர்கள் இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்து ஆட்டை திருடி சென்றது பதிவாகியுள்ளது. இதுகுறித்து சோமசுந்தரம் சமயபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.இப்பகுதியில் தொடரும் திருட்டு சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே திருடர்களை பிடிக்க ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related posts

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 3 நாளில் 130 கிலோ தங்கம் பிரித்தெடுப்பு: துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் பணிகள் விறுவிறுப்பு

மாநகராட்சிப் பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து

பொதுமக்கள் சிறப்பு குறைதீர் முகாம் 8 மாதங்களில் 851 மனுக்கள் மீது தீர்வு