இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வந்தார். குஜராத் தலைநகர் ஆமதாபாத்தில் வந்திறங்கிய அவருக்கு உயர் அதிகாரிகள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். பின்னர் குஜராத் சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை தந்த போரிஸ் ஜான்சன், மகாத்மா காந்தி நூல் நூற்ற ராட்டையில் நூல் நூற்றி மகிழ்ந்தார். மகாத்மா காந்தி எழுதிய ‘Guide to London’ புத்தகம் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது. குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உடனிருந்தார்.