திருவனந்தபுரம்: பங்குனி மாத பூஜைகள் மற்றும் ஆறாட்டு திருவிழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (14ம் தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இதையொட்டி நாளை முதல் 28ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். இதில் தினமும் 5,000 பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான ஆன்ைலன் முன்பதிவு 2 நாட்களில் முடிந்து விட்டது. இந்த நிலையில் சபரிமலையில் தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி அளித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் முன்பதிவு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது….