சபரிமலையில் தொடர்ந்து குவியும் பக்தர்கள்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்தாண்டு மண்டல கால பூஜைக்கான நடை  நவம்பர் 16ம் தேதி மாலை திறக்கப்பட்டது. அன்று தொடங்கி இன்றுவரை  கட்டுக்கடங்காமல் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.இதனால், பக்தர்களை  கட்டுப்படுத்தவும், உரிய வசதிகள் ஏற்படுத்தவும் திருவிதாங்கூர் தேவசம்  போர்டு, போலீசுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து  தினசரி பக்தர்கள் எண்ணிக்கை 90 ஆயிரமாக  குறைப்பு உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் விதிக்க தீர்மானிக்கப்பட்டது.இந்த கட்டுப்பாடுகளால் சபரிமலையில் எந்த பலனும்  ஏற்படவில்லை. ஆன்லைன் முன்பதிவு 90 ஆயிரமாக கட்டுப்படுத்தப்பட்ட போதிலும்  நேற்று 90 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனால் 12 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள்  வரிசையில் காத்திருந்தனர். பல இடங்களில் பக்தர்களை போலீசார் தடுத்து  நிறுத்தி வைத்தனர். நீண்ட நேரம் வரிசையில் காத்து இருந்ததால் குழந்தைகள் உள்பட ஏராளமானோர் மயக்கமடைந்தனர். சிலர் கீழே விழுந்தும் காயமடைந்தனர். …

Related posts

மதியம் 1 மணி நிலவரம்: ஹரியானாவில் 36.69% வாக்குப்பதிவு

1.2 லட்சம் பக்தர்களுக்கு கூடுதலாக அன்னதானம் வழங்க ரூ.13.45 கோடி செலவில் திருமலையில் அதிநவீன சமையல் கூடம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு திறந்து வைத்தார்

11 மணி நிலவரம்: ஹரியானாவில் 23% வாக்குப்பதிவு