சபரிமலையில் தினமும் 45 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி

திருவனந்தபுரம்: கொரோனா   பரவல் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலில், ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே   அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம்   வரை தினமும் முன்பதிவு செய்யும் 35 ஆயிரம் பக்தர்களுக்கு  அனுமதி  அளிக்கப்பட்டு வந்தது. ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாத  பக்தர்களுக்கு  நிலக்கல் உள்பட சில பகுதிகளில் உடனடி முன்பதிவு செய்யும்  வசதியும்  செய்யப்பட்டிருந்தது.  இந்நிலையில், தினசரி பக்தர்களின்  எண்ணிக்கை நேற்று முதல் 45 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 40  ஆயிரம் ேபருக்கு ஆன்லைன் மூலமும், 5 ஆயிரம் பேருக்கு உடனடி முன்பதிவு  மூலமும்  தரிசனம் செய்யலாம். ” நீலிமலை பாதை ”சபரிமலையில்  பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு செல்ல பயன்படுத்தப்படும் நீலிமலை பாதை கனமழையால் சேதமாகி உள்ளது. இது விரைவில்  சீரமைக்கப்பட்டு திறக்கப்படும் என தேவச ம் போர்டு தலைவர் அனந்தகோபன்  தெரிவித்தார்….

Related posts

கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை!

திருப்பதியில் லட்டு சர்ச்சை; பக்தர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் ‘சாந்தி யாகம்’

ஒரே நாடு ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி