சனிதோறும் படியுங்கள் வேப்பந்தட்டை அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் பொறுப்பேற்பு

பெரம்பலூர்: வேப்பந்தட்டை அரசு கலை அறி வியல் கல்லூரி முதல்வ ராக உமா மகேஸ்வரி பொ றுப்பேற்றார். பெரம்பலூர் மாவட்டம் ஆத் தூர் சாலையில் வேப்பந்த ட்டை-கிருஷ்ணாபுரம் இடை யே, வேப்பந்தட்டை அரசு கலை அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்க ல்லூரியின் முதல்வராக பணிபுரிந்து வந்த சிவனே சன் என்பவர் கடந்த மே மாத இறுதியோடு பணி ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து கல்லூரியின் தமிழ்த் துறை தலைவர் சேகர் பொறுப்பு முதல்வ ராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் தமிழக அரசு சென்னைஅண்ணா சாலை யில் உள்ள காயிதே மில் லத் மகளிர் கலை அறிவி யல் கல்லூரியில், கணித துறை தலைவராக பணிபு ரிந்து வந்த உமா மகேஸ் வரி என்பவரை பதவி உய ர்வு அடிப்படையில் வேப்பந் தட்டை அரசு கலை அறிவி யல் கல்லூரியின் முதல்வ ராக நியமனம் செய்துள் ளது. தொடர்ந்து உமா மகேஸ்வரி வேப்பந் தட்டை அரசு கலை அறிவி யல் கல்லூரியில் முதல்வ ராக பொறுப் பேற்றுக் கொ ண்டார். அவரிடம் சேகர் முறைப்படி பொறுப்புகளை ஒப்படைத்தார். புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல் வர் உமா மகேஸ்வரிக்கு துறைத் தலைவர்கள், பேரா சிரியர்கள், விரிவுரையாள ர்கள், மாணவ மாணவியர், அலுவலர்கள் வாழ்த்துக்க ளைத் தெரிவித்து வருகின் றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை