சென்னை: சந்தையில் கிடைப்பதைவிட கூடுதல் விலைக்கு தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் வாங்குவதில் ரூ.1 லட்சம் கோடி ஊழல் நடைபெற்று உள்ளது என்று அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டி உள்ளது. இதில் ஏற்கனவே 54 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு விட்டதாகவும் இனிவரும் காலங்களில் ஒப்பந்தத்தை ரத்து செய்யாவிடில் ரூ. 46 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அப்படி இருந்து ஒப்பந்தங்களை ரத்து செய்யாமல் கொள்முதல் செய்துள்ளார்கள். 2016 – 2017ம் ஆண்டு முதல் கொள்முதல் செய்ய ஆரம்பித்த மின்சார வாரியம் சந்தை விலையைவிட கூடுதல் விலைக்கு வாங்குது தற்போது வரை தொடர்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் இதனால் ஏற்பட்ட இழப்பு மட்டும் ரூ. 25 ஆயிரம் கோடி. இந்த ஊழல் முறைகேட்டிற்கு பொறுப்பான முன்னாள் மின்சார துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தற்போது உள்ள மின்சார துறை அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த புகார் பற்றிய விவரிவான தகவல்களை அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் நேற்று சென்னையில் நிருபர்களிடம் தெரிவித்தார்….