சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு ராட்டினங்கிணறு பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த தேர்தல் வாக்குறுதியான சத்துணவு ஊழியர்களையும், அரசு ஊழியராக்கி ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை வழங்குவதாக அறிவித்ததை நிறைவேற்ற கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது. தொடர்ந்து பேரணியாக புறப்பட்டு அரசு மருத்துவமனை வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்றனர். பின்னர்,  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார், அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை