தர்மபுரி, ஜூலை 11: தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில், நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணை தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு பென்சன் ₹6,750ஐ அகவிலை படியுடன் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீடு திட்டத்தை ஓய்வூதியர்களுக்கு அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியர்களுக்கு ஈமச்சடங்கு நிதி ₹25 ஆயிரம் வழங்க வேண்டும்.
ஜிபிஎப் பெறும் நடைமுறைகளை எளிமைபடுத்த வேண்டும். ஓய்வுகால பலன்களை ஓய்வுபெறும் நாளன்றே முழுமையாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில், குப்புசாமி, சேகர், பழனிசாமி, பெருமாள், காவேரி, துரை, கணேசன், கிருஷ்ணமூர்த்தி, மதலை முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.