பெரம்பலூர், செப். 28: சத்திரமனை கிராமத்தில் அக்9 ம்தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறவுள்ளது என்று மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, பெரம்பலூர் மாவட்டம் மற்றும் வட்டம், சத்திரமனை கிராமத்தில், எதிர்வரும் அக்-9ம் தேதி புதன்கிழமை அன்று மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெற உள்ளது.
பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெறும் பணி, தற்போது நடைபெற்று வருகிறது. எனவே, சத்திரமனை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களது கோரிக்கைகள் தொடர் பான மனுக்களை, சத்திர மனை கிராம நிர்வாகஅலுவலர் அலுவலகத்தில், முகாம் நடைபெறும் நாளிற்கு முன்னதாகவே அளித்து பயனடைய வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.