சட்ட விரோத மது விற்பனை; 6 பேர் கைது

 

ஈரோடு, ஜூலை 29: சட்டவிரோத மது விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, ஈரோடு வடக்கு,பவானி,ஈரோடு தாலுகா, மலையம்பாளையம் போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் நேற்று முன் தினம் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அரசு மதுபாட்டில்களை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த ஈரோடு பெரிய அக்ரஹாரம்,

முனியப்பன் கோயில் வீதியை சேர்ந்த ஜான்பாஷா (43), புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையை அடுத்துள்ள நெப்புகை பகுதியை சேர்ந்த மாரிமுத்து (47), பவானி, புது பஸ்நிலையம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (60), சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அடுத்துள்ள அரக்கோட்டை, வடக்கு தெருவை சேர்ந்த முருகன் (41), தேவகோட்டையை அடுத்துள்ள ராயர்பட்டினத்தை சேர்ந்த புஷ்பராஜ் (48) திருப்பூர் மாவட்டம், முத்தூர், செல்வகுமாரகவுண்டன் வலசு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (44)ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 53 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது