சட்ட விரோத மது விற்பனை; 4 பேர் கைது

ஈரோடு, ஜூன் 19: சிறுவலூர் அடுத்துள்ள காமராஜ் நகரில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக சிறுவலூர் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சோதனை செய்த போலீசார் மது விற்பனையில் ஈடுபட்ட கோபி, ஓலப்பாளையத்தை சேர்ந்த கார்த்திக் (36) என்பவரை கைது செய்தனர். இதேபோல, பர்கூர் தட்டக்கரை வனத்துறை அலுவலகம் அருகே மது விற்ற ஊகியம் புதுவீதியை சேர்ந்த காசி (36), கோபி, புதுமுகை முருகன் (48), சத்தி, கேஎன் பாளையம் பெரியசாமி (39) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு