சட்டவிரோத மது விற்பனை; 7 பேர் கைது

 

ஈரோடு, ஜூலை 30: சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, ஈரோடு டவுன், கருங்கல்பாளையம், கோபி,பவானி போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் நேற்று முன் தினம் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, மதுபாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த சென்னை, வியாசர்பாடி, பாரதி நகரைச் சேர்ந்த மணிகண்டன் (33), ஈரோடு முனியப்பன் கோயில் வீதியைச் சேர்ந்த கணேஷ் (42), கருங்கல்பாளையம், ராஜாஜிபுரத்தை சேர்ந்த மூர்த்தி (47), பவானிசாகர், அண்ணா நகரைச் சேர்ந்த செல்வன் (44), கேரளமா நிலம், பாலக்காடு அடுத்துள்ள பூதரா பகுதியை சேர்ந்த அஜித் குன்னத் (58), பவானி, கல்தொழிலாளர் முதல் வீதியை சேர்ந்த கோபால் (50), வரத நல்லூரை சேர்ந்த பூபதி (50) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த 60 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி