Tuesday, October 1, 2024
Home » சட்டம் – ஒழுங்கு சரியில்லாததால்தான் அதிமுக அறிவித்த முதலீடு வரவில்லை: மனோஜ் பாண்டியன் பேச்சுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி

சட்டம் – ஒழுங்கு சரியில்லாததால்தான் அதிமுக அறிவித்த முதலீடு வரவில்லை: மனோஜ் பாண்டியன் பேச்சுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி

by kannappan

சென்னை: ‘ஒரு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கின் அளவுகோல் சரியாக இருந்தால் முதலீடுகள் வரும்’ என்று அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் பேசினார். இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிமுக ஆட்சியில் அறிவித்த முதலீடுகள் வரவில்லை என்பதால் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று தானே அர்த்தம் என்றார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை ஆகிய மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தை தொடங்கி வைத்து ஆலங்குளம் மனோஜ் பாண்டியன் (அதிமுக) பேசியதாவது: ஒரு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு அளவுகோல் என்பது, அங்கு சாதி, மத மோதல்கள் இல்லாமல், வெளிநாட்டு முதலீடுகள் அதிகளவில் ஈர்க்கப்படுவதே ஆகும். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டது. அடுத்து எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது 2019ம் ஆண்டு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.3 லட்சத்து 501 கோடி முதலீடுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதிகளவில் வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டது.தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு: கடந்த அதிமுக ஆட்சியில் இரண்டு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. ஆனால் நீங்கள் புரிந்துணர்வு செய்யப்பட்ட அளவிற்கு முதலீடுகள் வரவில்லை. வெறும் 25 சதவீதம் மட்டுமே வந்துள்ளது. அறிவித்தபடி மிகப்பெரிய வேலைவாய்ப்பு எதுவும் வரவில்லை. அறிவிப்புகள் எல்லாம் ஏட்டளவிலேயே தான் உள்ளது. மனோஜ் பாண்டியன்: நான் எதுவும் குற்றச்சாட்டாக கூறவில்லை. ஒரு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கின் அளவுகோள் சரியாக இருந்தால் முதலீடுகள் வரும் என்றேன். அமைச்சர் தங்கம் தென்னரசு: சரியாக இருந்து இருந்தால் எல்லாம் வந்து இருக்கும். ஆனால் நீங்கள் அறிவித்த முதலீடுகள் வரவில்லை என்பதால், சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று தானே அர்த்தம். அதனால் தான் முதலீடுகள் வரவில்லை….

You may also like

Leave a Comment

three + 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi