சடலத்துடன் மறியல்; 11 பேர் மீது வழக்கு

விருதுநகர், மே 13: விருதுநகரில் சடலத்துடன் மறியலில் ஈடுபட்ட சம்பவத்தில் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் அல்லம்பட்டி சந்திப்பில் கூரைக்குண்டு ஊராட்சி சுடுகாட்டிற்கு செல்லும் பாதையில் நகராட்சி குப்பைகள் கொட்டி வைத்ததால் சடலத்தை கொண்டு செல்ல பாதையில்லை என கூறி, சடலத்துடன் நேற்று முன்தினம் மறியல் போராட்டம் நடத்தினர். உரிய ஏற்பாடுகள் செய்து தருவதாக உறுதி அளித்ததன் பேரில் சடலத்தை அடக்கம் செய்தனர்.

இது குறித்து கிழக்கு போலீசில் கோட்டைப்பட்டி விஏஓ உமா கணேசன் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுந்தரமூர்த்தி, முருகன், சோலையப்பன், ஆறுமுகம், ஜெயப்பாண்டி, அதிமுக உறுப்பினர் மாரிக்கனி, மநீம மாவட்ட செயலாளர் காளிதாஸ், அதிமுக 31வது வார்டு கவுன்சிலர் சரவணன், புதிய தமிழகம் உறுப்பினர் கடற்கரை, மார்க்சிஸ்ட் கிளை செயலாளர் வேல்முருகன், பாஜக உறுப்பினர் செல்வராமு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி