Monday, July 1, 2024
Home » சங்கரன்கோவில் பகுதியில் மாணவர் உள்பட இருவர் தூக்கிட்டு தற்கொலை

சங்கரன்கோவில் பகுதியில் மாணவர் உள்பட இருவர் தூக்கிட்டு தற்கொலை

by Karthik Yash

சங்கரன்கோவில்,அக்.10: சங்கரன்கோவில் அருகேயுள்ள கே. ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மகனான 16 வயது சிறுவன் திருமலாபுரம் அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில் நேற்று பள்ளிக்கு செல்லாத மாணவர், வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற சின்ன கோவிலாங்குளம் போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு சம்பவம்: இதே போன்று சங்கரன்கோவில் ரயில்வே பீடர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோட்டூர் சாமி (36) என்ற கூலி தொழிலாளியும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் விரைந்து வந்த சங்கரன்கோவில் டவுன் போலீசார், கோட்டூசாமியின் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீசார், அவர் எதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

1 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi