சங்கரன்கோவிலில் முப்பெரும் விழா

சங்கரன்கோவில், ஆக. 23: சங்கரன்கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சங்கரன் கோவில் வடக்கு ரத வீதியில் வைத்து வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ ஏற்பாட்டில் இன்று மாலை 7 மணிக்கு சங்கரன்கோவில் நகரைச் சேர்ந்த சான்றோர்களுக்கு விருது வழங்கும் விழா, அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு விருது வழங்கும் விழா, தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கு பாராட்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெறுகிறது. தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், திரைப்பட பாடகர்கள் மாலதி மற்றும் நெல்லை பிரபாகரன் கலந்து கொள்ளும் ஜேஆர்எஸ் குழுவினரின் இன்னிசை கச்சேரியும் நடைபெறுகிறது. சங்கரன்கோவிலில் சாதனை புரிந்த மண்ணின் மைந்தர்களை பாராட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என ராஜா எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

Related posts

நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

மாடம்பாக்கத்தில் அடிப்படை வசதி கோரி அதிமுக 26ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு