சகதியில் வழுக்கி விழுந்து இளம்பெண் பரிதாப சாவு

பேரையூர், ஜூன் 8: பேரையூர் அருகே சகதியில் வழுக்கி விழுந்து பெண் உயிரிழந்தார். பேரையூர் அருகே ஏ.ராமநாதபுரம் மேலச்செம்பட்டியை சேர்ந்தவர் பால்பாண்டி மனைவி தேவி(28). இவர் தனது குடும்பத்துடன் நேற்று மத்தக்கரையில் உள்ள சிவசக்தி கோயிலுக்கு சாமி கும்பிட வந்திருந்தார். அங்கு மழை பெய்த காரணத்தினால் கோயில் சுற்றுப்பகுதியில் சேறும், சகதியுமாக கிடந்தது. இதில் நடந்து சென்று கொண்டிருந்த தேவி திடீரென கால் வழுக்கி கீழே விழுந்தார். அவரை மீட்டு பேரையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் தேவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பேரையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி