க.பரமத்தி, டிச.20: க.பரமத்தி அருகே காட்டம்பட்டி பகுதிகளில் மது பாட்டில் பதுக்கிய வழக்கில் முதியவரை தென்னிலை போலீசார் கைது செய்தனர். க.பரமத்தி ஒன்றியம் தென்னிலை காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி மது விற்பனை விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் காட்டம்பட்டி பகுதிக்கு தென்னிலை எஸ்ஐ பிரியதர்ஷினி மற்றும் போலீசார் சென்று சோதனை நடத்தினர். இதில் வெள்ளகோவில் அருகே துக்காச்சிபுதூரை சேர்ந்த பெரியசாமி (67) என்பவர் அப்பகுதி முள்காட்டில் மது விற்பனைக்காக பாட்டில்கள் பதுக்கியது கண்டறியப்பட்டது. மது பாட்டில்களை பறிமுதல் செய்ததுடன் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.