க.பரமத்தி அருகே போதையில் கூலி தொழிலாளி தூக்கு மாட்டி தற்கொலை

க.பரமத்தி: குடிபோதையில் கூலி தொழிலாளி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். க.பரமத்தி அடுத்த கோடந்தூர் ஊராட்சி மூலத்துரைநாச்சிபாளையம் பகுதியை சோந்தவர் மணியன் மகன் சிவசுப்பிரமணி(35). கூலி தொழிலாளியான இவர் அதிக மது பழக்கம் உள்ளவராம். அதனால் அவ்வப்போது குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த இவர் மனைவியிடையே தகராறு செய்ததாக தெரிகிறது. பிறகு வீட்டு குளியல் அறையில் தூக்கு மாட்டி இறந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த தென்னிலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பாதிக்கப்பட்ட இவரது மனைவி தானியா கொடுத்த புகாரின் பேரில் தென்னிலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 326 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கண்ணுக்குழி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடம் துவக்கம்

நெல்லில் நவீன ரக தொழில் நுட்ப பயிற்சி