க.பரமத்தி அருகே பவித்திரத்தில் சாலையோர வளைவில் மெகா பள்ளம் சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

க.பரமத்தி: க.பரமத்தி ஒன்றியம் பவித்திரம் ஊராட்சி பவித்திரம்காலனி பகுதி வழியாக புன்னம்சத்திரம் செல்லும் நெடுஞ்சாலை முக்கிய பகுதியாக உள்ளது. இந்த சாலை வழியே வேலூர், வேலாயுதம்பாளையம், புன்னம்சத்திரம் சுற்று பகுதியினர் சின்னதாராபுரம் மூலனூர், தாராபுரம், பழனி, பொள்ளாச்சி போன்ற ஊர்களுக்கு அதிகளவில் வாகனங்கள் சென்று திரும்புகின்றன. இந்நிலையில் பவித்திரம் காலனி பகுதி ஆபத்தான வலைவில் மிகப்பெரிய பள்ளம் உள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் வரும் பலரும் எதிரே வேகமாக வரும் வாகனங்களுக்கு வழி கொடுக்க நினைத்து ஒதுங்கும் போது மிகப்பெரிய பள்ளத்தால் சறுக்கி விபத்துக்குள்ளாகின்றனர். ஆகவே இந்த சாலையில் உள்ள மிகப்பெரிய மெகா பள்ளத்தை சீரமைத்து பாதுகாப்பான போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை