க.பரமத்தி அருகே அனுமதியின்றி மது விற்ற வாலிபர் கைது

க.பரமத்தி: க.பரமத்தி அருகே உள்ள நெடுஞ்கூர் பகுதி முள்காட்டில் அனுமதியின்றி மது விற்ற வழக்கில் ஒருவரை க.பரமத்தி போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். க.பரமத்தியை அடுத்த நெடுங்கூர் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் க.பரமத்தி போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள வெட்டிக்காடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் அரவிந்த் (30), நெடுங்கூர் பகுதி முள்காட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்ததுடன் க.பரமத்தி போலீசார் அரவிந்த் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

Related posts

ரயில் நிலையத்தில் கடை வைத்து தருவதாக பாஜ நிர்வாகி ₹2.5 லட்சம் மோசடி பெண் தற்கொலைக்கு முயற்சி : கடிதம் எழுதி வைத்ததால் பரபரப்பு

போதையில் தங்கையை ஆபாசமாக திட்டியதால் ஆத்திரம்; மீன் பண்ணை ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை: உடன் பணியாற்றிய வாலிபர் கைது

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசூலிப்பு; மும்மடங்கு லாபம் தருவதாக கூறி 1,930 பேரிடம் ₹87 கோடி மோசடி: 25 பேர் ஏஜென்ட்டுகளாக செயல்பட்டது அம்பலம்